கலைஞர் நினைவு தினம் - மு.க.ஸ்டாலின் தலைமையில் புறப்பட்ட அமைதி பேரணி
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று திமுக சார்பில் அமைதி பேரணி நடத்தப்பட்டு வருகிறது.
கருணாநிதியின் நினைவு தினம்
5 முறை தமிழகத்தின் முதல்வராக இருந்த முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான மு கருநணாநிதியின் 5-வது நினைவு தினம் இன்று. இதனை முன்னிட்டு இன்று காலை 7:30 மணிக்கு திமுக சார்பில் அமைதி பேரணி நடத்தப்பட்டு வருகின்றது.
சென்னை அண்ணாசாலையில் துவங்கும் இந்த பேரணி கலைஞர் நினைவிடத்தில் சென்று நிறைவடைகிறது. இதில், தமிழக முதல்வரும், திமுகவின் தலைவருமான முக ஸ்டாலின் மற்றும் கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
முக ஸ்டாலின் தலைமையில் பேரணி
இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் தமிழ்நாடு அமைச்சர்கள், திமுக மாவட்ட செயலாளர்கள், முன்னாள் - இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளார்கள் என திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வரும் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த பேரணியின் காரணமாக சென்னை அண்ணாசாலையின் போக்குவரத்து மாற்றப்பட்டு, வேறு வழியில் அனுப்பட்டுள்ளது, மேலும், இந்த பேரணியின் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.