ஆம்புலன்ஸ் கதவு திறக்க முடியாததால் நோயாளி உயிரிழப்பு
மருத்துவமனைக்கு வந்த ஆம்புலன்ஸ் வாகன கதவு திறக்காததால் நோயாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
கேரளா மாநிலம் கருவந்துருத்தியைச் சேர்ந்த கோயமோன் என்பவர் சாலை விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கதவு கோளாரால் நோயாளி உயிரிழப்பு
பின்னர் அவருக்கு மேல் சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து அவரை ஆம்புலன்சில் ஏற்ற முயற்சித்த போது ஆம்புலன்சின் கதவைத் திறக்க முடியாமல் போனது.
இதையடுத்து அரை மணி நேரம் போராடி ஆம்புலன்ஸ் கதவை உடைத்து திறந்தனர். பின்னர் கோயமோன் மேல் சிகிச்சைக்காக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிகிச்சைக்கு கால தாமதம் ஆனதால் கோயமோன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரிக்கு அவசர சிகிச்சைக்காக வந்த நோயாளி