அடேங்கப்பா... வெளியான இரண்டே நாளில் பல கோடிகளை அள்ளிய ‘பதான்’ படம் - வாயடைத்த ரசிகர்கள்...!
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பாலிவுட் நட்சத்திர நாயகனாக ஷாரூக்கான் நடிப்பில் வெளியான ‘பதான்’ படம் வெளியான இரண்டு நாட்களில் பல கோடிகளை அள்ளி வசூல் சாதனைப் படைத்துள்ளது.
‘பதான்’ படம் சர்ச்சை
பாலிவுட் நட்சத்திர நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகை தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பதான்’. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியானது.
இதில், ‘பேஷாராம் ரங்’ பாடலானது கடும் சர்ச்சையை கிளப்பியது. அதில் நடித்துள்ள தீபிகா படுகோனே காவி நிற உடை அணிந்து படுகவர்ச்சியாக நடனமாடியுள்ளார்.
காவி நிறத்தில் பிகினி உடையில் தீபிகா தோன்றிய காட்சிகள் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் உள்ளது என்று பல இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இப்பாடலை தடை செய்யக்கோரி வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது.
‘பதான்’ படம் ரிலீஸ்
இத்தனை எதிர்ப்புகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் ‘பதான்’ படம் வெளியாகியுள்ளது. நேற்று முன்தினம் இந்தியாவில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட திரைகளிலும், வெளிநாடுகளில் 2500-க்கு மேற்பட்ட திரைகளிலும் ரிலீஸாகியுள்ளது.
போஸ்டர்களை கிழித்தெறிந்த கும்பல்
இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய பிரதேச மாநிலம், பர்வானியில் உள்ள திரையரங்கின் முன் விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அதேபோல் இந்தூர், குவாலியரிலும் பதான் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டது.
பல கோடிகளை அள்ளிய ‘பதான்’ படம்
இந்நிலையில், கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ‘பதான்’ திரைப்படம் வெளியான 2வது நாளில் பல கோடிகளை அள்ளியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று விடுமுறை தினம் என்பதால் முதல் நாளை விட அதிக கலெக்ஷனை அள்ளியுள்ளது பதான் திரைப்படம். இரண்டு நாட்கள் முடிவில் உலகளவில் ரூ.235 கோடி வசூலித்து மாபெரும் சாதனைப் படைத்துள்ளது இப்படம். குறிப்பாக நேற்று இந்தியாவில் மட்டும் இப்படம் சுமார் ரூ.70 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.