குறுக்கே வந்த மாடு; தடம் புரண்ட மின்சார ரயில் - மீண்டும் பகீர் சம்பவம்!

Odisha Odisha Train Accident
By Sumathi Nov 09, 2023 04:12 AM GMT
Report

 எருமை மாடு மீது மோதி பயணிகள் ரயில் தடம்புரண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மோதிய மாடு

ஒடிசா, ஜகர்சுகுடா -சம்பல்பூர் இடையே பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி, வழக்கம்போல் ரயில் புறப்பட்டு சம்பல்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த போது மாடு தண்டவாளத்தின் குறுக்கே வந்தது.

odisha train accident

அதில், மாடு மீது மோதிய வேகத்தில் ரயில் தடம்புரண்டது.இதில் உயிரிழப்பு பாதிப்பு ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ரயில் விபத்துக்கு காரணம் என்ன? - வெளியான அதிர்ச்சி தகவல்

சென்னை ரயில் விபத்துக்கு காரணம் என்ன? - வெளியான அதிர்ச்சி தகவல்

ரயில் விபத்து

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சம்பல்பூர் கோட்ட ரயில்வே மேலாளர் மற்றும் ரயில்வே குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, தண்டவாளத்தை சீரமைப்பதற்கான பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் நிகழ்விடத்துக்கு மீட்பு ரயிலும் சென்றுள்ளது.

மேலும், மீட்பு பணிக்கு பின் ரயில் தடத்தில் சோதனை ஓட்டம் பார்க்கப்பட்ட பினார் 30 கி.மீ வேகத்தில் ரயில் இயக்கத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்லது.