தேசிய விருது பெற்ற இயக்குநர் துரை காலமானார் - திரையுலகில் அடுத்த அதிர்ச்சி!

Tamil Cinema Death Tamil Actors Tamil Actress
By Jiyath Apr 22, 2024 09:47 AM GMT
Report

தேசிய விருதுகளை வாரி குவித்த 'பசி' என்ற திரைப்படத்தின் இயக்குநர் துரை காலமானார். 

இயக்குநர் துரை

தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குநர், கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக திறமையாளராக விளங்கியவர் இயக்குநர் துரை. இவர் இயக்கிய அவளும் பெண்தானே, ஆசை 60 நாள், பாவத்தின் சம்பளம், ஒரு வீடு ஒரு உலகம், கிளிஞ்சல்கள் உள்ளிட்ட படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

தேசிய விருது பெற்ற இயக்குநர் துரை காலமானார் - திரையுலகில் அடுத்த அதிர்ச்சி! | Pasi Movie Director Durai Passes Away

துரை இயக்ககத்தில் கடந்த 1979-ம் ஆண்டு பசி என்ற திரைப்படம் வெளியானது. இந்த படம் சென்னையின் கூவம் ஆற்றின் கரையோரம் வாழும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும்.

பதறிப்போன நடிகை த்ரிஷா - வாக்களிக்க வந்த இடத்தில் நடந்த சம்பவம்!

பதறிப்போன நடிகை த்ரிஷா - வாக்களிக்க வந்த இடத்தில் நடந்த சம்பவம்!

காலமானார்

இந்த படத்திற்கு சிறந்த இயக்குநர் , திரைப்படம், நடிகை என்று 3 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. மேலும், மாநில அரசு விருதுகள், பிலிம்பேர் விருதுகள் என பல்வேறு விருதுகளை இந்த படம் பெற்றுள்ளது.

தேசிய விருது பெற்ற இயக்குநர் துரை காலமானார் - திரையுலகில் அடுத்த அதிர்ச்சி! | Pasi Movie Director Durai Passes Away

இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக இயக்குநர் துரை இன்று காலமானார். இவருக்கு மனைவியும் 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். துரை மறைவிற்கு தமிழ் திரையுலகினர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.