விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்வில் முக்கியமான வாய்ப்பு இது - பார்த்திவ் படேல்
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகயை உலகம் முழுவதும் ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்டனில் வரும் ஜூன் 18ம் தேதி முதல் ஜூன் 22ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட் உலகில் யார் ஜாம்பவான் என்பதை தீர்மானிப்பதாக இந்தப் போட்டி அமைந்துள்ளது.
இது குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்தீவ் பட்டேல், ஐசிசி கோப்பையையே வென்றிடாத விராட்டுக்கு இந்து ஒரு நல்ல வாய்ப்பு. இதில் மட்டும் வெற்றி பெற்று கொடுத்துவிட்டால் அது கோலியின் கேப்டன்சியில் ஒரு புதிய மைல்கல்லாக பாராட்டப்படும்.
ஒருவர் முதல் ஆளாக ஒரு சாதனை செய்பவர் மிகவும் ஸ்பெஷலாக உற்றுநோக்கப்படுவார். அந்த வகையில் முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கோலி வென்றாக வேண்டும்.
தொடரின் பாதியில் விதிமுறைகள் மாற்றப்பட்டன, புள்ளி விகிதங்கள் மாற்றப்பட்டன. எனினும் இந்திய அணி இறுதிப்போட்டி வரை சென்றுள்ளது. எனவே மீதமுள்ள பணியை கோலி செய்து முடிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.