’நானே வருவேன்’ என அடம்பிடித்து வந்தேன் - சைடு கேப்பில் கலாய்த்த பார்த்திபன்!
நானே வருவேன் என்று அடம்பிடித்து இங்கு வந்தேன் என பார்த்திபன், தனுஷை சூசகமாக கூறியுள்ளார்.
விக்ரம்
பொன்னியின் செல்வன் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் விக்ரம், ஜெயம் ரவி, பார்த்திபன், விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விக்ரம் பேசுகையில்,
மூன்று தலைமுறையினர் இந்த பொன்னியின் செல்வன் படத்தை காண ஆவலாக உள்ளது மிகப் பெருமையாக உள்ளது. ஒரே ஒரு வேண்டுகோள், வயதானவர்கள் பொன்னின் செல்வன் திரைப்படத்தை காண திரையரங்குக்கு வருகின்றனர். அவர்களுக்கு தகுந்த உதவியை தியேட்டர் உரிமையாளர்கள் செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன் என்றார்.
த்ரிஷா
தொடர்ந்து பேசிய நடிகை த்ரிஷா, ”நம்ம சென்னையில் ஆரம்பமானது முடிப்பதும் சென்னையில் தான் ஏனென்றால் இது ஹோம் டவுன். படங்கள் ரிலீசுக்கு முன்பு படபடப்பு எப்போதும் இருக்காது. ஆனால் பொன்னியின் செல்வன் படத்திற்கு இருக்கிறது.
இந்த மாதிரி நான் நடித்த படங்களில் எதற்குமே இந்த அளவிற்கு ப்ரமோஷனுக்காகச் சென்றதில்லை. பொன்னியின் செல்வன் படத்திற்காக நீங்கள் அனைவரும் பெருமை படுவீர்கள்” என்றார். இதையடுத்து, பார்த்திபன் மேடையில் பேசும்போது,
பார்த்திபன்
’நானே வருவேன்’ என்று அடம் பிடித்து விட்டு தான் இன்று பொன்னியின் செல்வன் பிரஸ் மீட்டுக்கு வந்தேன். தஞ்சாவூர் சென்று படத்தை பார்த்துவிட்டு ராஜராஜ சோழனுக்கு மரியாதை செலுத்தலாம் என்று இருக்கிறேன். ரொம்ப நாள் காதலித்த இந்த பொன்னியின் செல்வன் படம் இப்போது ஆடியன்ஸ்க்கு செல்கிறது.
பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் அனைவரின் ரசிகன் நான் என்று கூறினார்.