காலில் விழுந்து கெஞ்சினேன்; ஆனாலும் கெட் அவுட் சொன்ன இளையராஜா - மனம் திறந்த பார்த்திபன்!

Parthiban Tamil Cinema Ilayaraaja
By Sumathi Feb 07, 2024 08:10 AM GMT
Report

இளையராஜா குறித்து நடிகர் பார்த்திபன் பகிர்ந்துள்ள தகவல் வைரலாகி வருகிறது.

 நடிகர் பார்த்திபன்

நடிகர் மட்டுமல்லாது இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமைகளை கொண்டவர் பார்த்திபன். பாக்கியராஜின் உதவி இயக்குனராக திரைப் பயணத்தை தொடங்கினார்.

parthiban - ilayaraja

‘புதிய பாதை’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதற்கு முன் இயக்கவிருந்த படத்தை குறித்து இவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், பார்த்திபன், பாக்யராஜிடம் பட இயக்கம் பற்றி கூறியபோது சரி அந்த படத்திற்கு நான் இசையமைக்கிறேன் என்று பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

ஆனால், அவருக்கு இளையராஜா இசையமைக்க ஆசை இருந்து அதை பாக்யராஜிடம் தெரிவித்ததில் அவரும் சரி எனக் கூறியுள்ளார். உடனே, இளையராஜாவை பார்க்க சென்ற பார்த்திபன் அவர் காலில் விழுந்து வணங்கி, இளையராஜாவிடம் தனது முதல் படத்திற்கு இசையமைக்குமாரு கேட்டுள்ளார்.

அழுது அடம்பிடிச்சா தான் பார்த்திபன் விடுவாரு - மனம் திறந்த நடிகை சீதா

அழுது அடம்பிடிச்சா தான் பார்த்திபன் விடுவாரு - மனம் திறந்த நடிகை சீதா

மறுத்த இளையராஜா 

ஆனால் அவர் வெளிய போங்க கெட் அவுட், பாக்யராஜ் இசையமைப்பாளர் ஆய்ட்டாருல்ல. நீயும் போய் ஆர்மோனிய பெட்டிய வாங்கி வாசி என்றுள்ளார். மீண்டும் இளையராஜா காலில் விழுந்து இல்ல சார் நான் அப்படிலாம் பண்ணவே மாட்டேன் சார் என்று கூறியும் மறுத்துள்ளார். பின்னர் பாக்யராஜே அந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

காலில் விழுந்து கெஞ்சினேன்; ஆனாலும் கெட் அவுட் சொன்ன இளையராஜா - மனம் திறந்த பார்த்திபன்! | Parthiban About Ilayaraja Refused To His Films

இந்நிலையில் அந்த படம் பாதியிலேயே நின்று, புதிய பாதை படத்திற்கு இசையமைக்குமாறு இளையராஜாவிடம் பார்த்திபன் கேட்டுள்லார். மேலும், பாக்யராஜ் சாருக்கும் இந்த படத்திற்கும் சம்மந்தமே இல்லை என்று கூறி கேட்டபோதும் மறுப்பு தெரிவித்துள்ளார். அதன் பின் தனது படங்களில் இளையராஜா இசையமைத்தார் என்று தெரிவித்துள்ளார்.