அந்த நேரத்திலும் நன்றி சொன்னார் பாத்திங்கலா அதான் அஜித் : பார்த்திபன் புகழாரம்

Ajith Kumar Parthiban Death
By Irumporai Mar 25, 2023 07:38 AM GMT
Report

நடிகர் அஜித் குமாரின் தந்தை மணி என்கிற சுப்ரமணியன் நேற்று அதிகாலை காலமானார் , அவரது உடல் சென்னை பெசன் நகர் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.

அஜித் தந்தை மறைவு

தந்தை மறைவால் சோகத்தில் இருக்கும் அஜித் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நடிகர்கள் மற்றும் அவரது நண்பர்கள் நேரில் சென்றும் சமூகவலைத்தளங்களிலும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஜய், பார்த்திபன், மிர்ச்சி சிவா, சிம்பு உள்ளிட்டோர் நேரில் சென்று அஜித்திற்கு ஆறுதல் கூறியிருந்தனர்.

அந்த நேரத்திலும் நன்றி சொன்னார் பாத்திங்கலா அதான் அஜித் : பார்த்திபன் புகழாரம் | Parthiban About Ajith Father Death

ட்விட்டர் பக்கம் வாயிலாக கமல், விக்ரம், சிம்பு, பிரசன்னா, சிம்ரன் உள்ளிட்ட பலர் ஆறுதல் கூறி பதிவிட்டிருந்தனர். மேலும் அரசியல் தலைவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜயகாந்த், திருமாவளவன்,உள்ளிட்ட பலரும் ஆறுதல் கூறி இருந்தனர்.

இந்த நிலையில் இறுதி ஊர்வலத்தில் அஜித்தின் பண்பு குறித்து நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில்:  

பார்த்திபன் நெகிழ்ச்சி 

தந்தையின் மறைவின் போது, நண்பர் அஜித் உள்ளூரில் இருந்தது நல்லது. சோகத்தைப் புதைத்துக் கொண்டு வந்தவர்களுக்கு நன்றி சொன்னார்.

மயானம் செல்லத் தயாரானபோது காரில் அமர்ந்தவர், என் அருகில் சோழா பொன்னுரங்கம் (அமராவதி தயாரிப்பாளர்) நிற்பதைக் கண்டு இறங்கி வந்து நன்றி சொல்லிச் சென்ற பண்பு அவருக்கானது எனக் குறிப்பிட்டுள்ளார்