மகனின் கல்லறையில் 'QR Code' - பெற்றோரின் வினோத செயலால் கண் கலங்கும் மக்கள்

Kerala Death
By Thahir Mar 25, 2023 05:57 AM GMT
Report

உயிரிழந்த மகனின் கல்லறையில் பெற்றோர் க்யூஆர் கோடு பதித்து மீண்டும் அவரின் நினைவுகளுக்கு உயிர் கொடுத்துள்ளனர்.

விளையாட்டின் போது உயிரிழந்த மருத்துவர் 

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 226 வயதே ஆன இளம் மருத்துவர் ஐவின் பிரான்சிஸ் கடந்த 2021 ஆம் ஆண்டு பேட்மிட்டன் விளையாடி கொண்டிருந்த போது உயிரிழந்தார்.

படிப்பு, இசை, என அனைத்திலும் வல்லவனாக வந்த ஐவின் பிரான்சிஸ் உயிரிழந்தது அவரின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மிகவும் கவலையில் வாடி வந்த குடும்பத்தினர் மற்றும் குடும்பத்தினர் மகனின் திறமைகளை உலகறியச் செய்ய வேண்டும் என்று விரும்பியுள்ளனர்.

கல்லறையில் க்யூஆர் கோடு

இந்த நிலையில், ஐவின் பிரான்சிஸ் குறித்த தகவல்களை அவரது கல்லறையில் பதிக்க அவரது அக்கா யோசனை தெரிவித்துள்ளார்.

மகனின் கல்லறையில்

அவரின் யோசனையை ஏற்றுக் கொண்ட அவரது பெற்றோர் ஐவின் பிரான்சிஸ் கல்லறையில் க்யூஆர் கோடு பதித்துள்ளனர்.

அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக அவரது கல்லறையில் பெ்றறோர் ஐவின் பிரான்சிஸ் குறித்த முழு விவரத்தை க்யூஆர் கோடு வடிவத்தில் பொறுத்தி அவரின் நினைவுகளுக்கு உயிர் கொடுத்துள்ளனர்.