பெற்றோருக்கு பயந்து கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு

sucide college parents affraid
By Praveen Apr 29, 2021 11:17 PM GMT
Report

தேர்வில் தோல்வி அடைந்தால் பெற்றோரிடம் சொல்ல தைரியம் இல்லாத கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மொரால்பாளையம் என்ற கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மகள் உள்ளார். இவர் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இறுதி ஆண்டு படித்து வந்துள்ளர்.

இந்நிலையில் ராஜேஸ்வரி திடீரென தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் இருந்த ராஜேஸ்வரியை அருகிலுள்ளவர்கள் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் அங்கு அவருக்கு அளிக்கபட்ட சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறைனர் நடத்திய விசாரைணயில் நடைபெற்ற பல்கலை கழக தேர்வில் அரியர் இருப்பதை தனது பெற்றோரிடம் கூறினால் திட்டிவிடுவார்கள் என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.