அரிசிக்கு ஏற்றுமதி வரி விதித்த மத்திய அரசு - திண்டாடும் உலக நாடுகள்!

India
By Sumathi Aug 28, 2023 08:12 AM GMT
Report

மத்திய அரசு புழுங்கல் அரிசிக்கு 20 சதவீதம் ஏற்றுமதி வரி விதித்துள்ளது.

ஏற்றுமதி வரி 

தொடர் பருவமழை, பருவநிலை மாறுபாடு உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் தானியங்களின் உற்பத்தி கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் அரிசி மற்றும் மளிகைப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

அரிசிக்கு ஏற்றுமதி வரி விதித்த மத்திய அரசு - திண்டாடும் உலக நாடுகள்! | Parboiled Rice Leads Price Hike In The World

அதனைத் தொடர்ந்து, மத்திய அரசு கடந்த மாதம் பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இந்நிலையில், புழுங்கல் அரிசி ஏற்றுமதி மீது 20 சதவீதம் ஏற்றுமதி வரி விதித்துள்ளது.

மத்திய அரசு முடிவு

அரிசி விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும் உள்நாட்டின் தேவையை பூர்த்தி செய்யவும் அரிசி ஏற்றுமதியில் அரசு கட்டுபாடுகளை விதித்துள்ளது.

சர்வதேச சந்தையில் இந்தியா 40 சதவீத அரிசி ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த நடவடிக்கையால் இந்தியாவிடம் இருந்து அரிசி வாங்கும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் என நிலை உருவாகியுள்ளது.