ஒருமுறை பட்டதே போதும், இபிஎஸ் உடன் இணைவதற்கு வாய்ப்பே இல்லை - ஓபிஎஸ் உறுதி!

Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Vinothini Jul 01, 2023 08:47 PM GMT
Report

 முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், பழனிச்சாமியுடன் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

ஆலோசனை கூட்டம்

சென்னை - எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள அசோகா ஹோட்டலில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

panneerselvam-about-edappadi-palaniswami

அது நிறைவுபெற்ற பிறகு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பன்ரூட்டி ராமச்சந்திரன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது ஓபிஎஸ், “ எடப்பாடி பழனிசாமி தரப்புடன் இனி இணைப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ஒருமுறை இணைந்தற்கான நமக்குக் கற்பித்து விட்டனர்" என்று கூறியுள்ளார்.

பேட்டி

இதனை தொடர்ந்து, அவர் பேசுகையில், "கொங்கு மண்டல மாநாடு உறுதியாக நடைபெறும். விரைவில் தேதி அறிவிக்கப்படும். கூட்டணி தொடர்பாக பாஜகவினர் எங்களுடன் பேசி வருகிறார்கள். அமைச்சரை பதவியில் இருந்து நீக்க அதிகாரம் உள்ளதா இல்லையா என்பது ஆளுநருக்கே தெரியவில்லை.

panneerselvam-about-edappadi-palaniswami

ஆளுநரின் நடவடிக்கை சரியானது இல்ல என்று மத்திய அரசே சொல்லிவிட்டது. செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்துவிட்டார்" என்று செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.