ரசத்த ஊத்துப்பா... பானிபூரியை ருசித்து, ருசித்து சாப்பிட்ட யானை - வைரலாகும் வீடியோ
பானிபூரி சாப்பிட்ட யானை
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பானிபூரி கடைக்கு பாகனுடன் ஒரு யானை வந்தது. அப்போது, பானிபூரி கடைக்காரர் பானிபூரியில் உருளைக்கிழங்கு வைத்து, அதில் கொஞ்சம் புளி ரசம் ஊற்றி யானைக்கு கொடுத்தார்.
இதன் சுவையில் மெய்மறந்த யானை மீண்டும், மீண்டும் கடைக்காரரிடம் தும்பிக்கையை தூக்கி காட்டியது. யானை எத்தனை முறை தும்பிக்கையை தூக்கி காட்டுகிறதோ அத்தனை முறை அந்த கடைக்காரர் பானிபூரியை கொடுத்துக்கொண்டே இருந்தார்.
இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்தில் சிரித்துக் கொண்டிருந்தனர்.
தற்போது, இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
हाथी को पानीपुरी पसंद है! एक के बाद कई गोलगप्पे खाए.
— Upadhi Gulati (@UpadhiGulati) October 11, 2022
सोशल मीडिया पर आज का ज़ायकेदार वीडियो!#TrendingNow #trendingvideo #Twitter #elephant #food #panipuri #tuesdayvibe #Video #viralvideo pic.twitter.com/9gNsA7b9Ea