Thaipusam 2023 : விண்ணை முட்டிய அரோகரா கோஷம் : பழனியில் சாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்

By Irumporai Feb 05, 2023 07:03 AM GMT
Report

ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசப் பெருவிழா கடந்த ஜன.29ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது.

 தை பூசம் பழனியில்

 10 நாட்கள் நடைபெறும் விழாவை முன்னிட்டு தினமும் வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசாமி பல்வேறு வாகனங்களில் நான்கு இரதவீதி உலா எழுந்தருளினார். இன்று தைப்பூச நாளை முன்னிட்டு பழனி மலைக்கோவிலில் இன்று அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Thaipusam 2023 : விண்ணை முட்டிய அரோகரா கோஷம் : பழனியில் சாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள் | Palani Murugan Temple Thai Pusam

பழனியில் தைப்பூசத்திருவிழா கடந்த 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்

Thaipusam 2023 : விண்ணை முட்டிய அரோகரா கோஷம் : பழனியில் சாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள் | Palani Murugan Temple Thai Pusam

குவிந்த பக்தர்கள்

இந்த நிலையில் 8-ஆம் நாள் திருவிழாவான இன்று பழனி மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் பழனி கோவிலில் குவிந்துள்ளனர். இன்று அதிகாலை மூன்று‌மணிமுதல் தற்போது 11 மணி வரை 1 லட்சத்து 10 ஆயிரம் பக்தர்கள் சாமிதரிசனம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.