நாங்க இருக்கிறதே நிலாதான்; இங்கயும் அப்படிதான் இருக்கு - சந்திராயன் 3 குறித்து பாக். நபர் ஆதங்கம்!

Pakistan India
By Sumathi Aug 25, 2023 03:08 AM GMT
Report

நாங்கள் இருப்பதே நிலாவில்தான் என தெரிவித்து வரும் பாகிஸ்தானியர்களின் பேட்டி வைரலாகி வருகிறது.

சந்திராயன் 3

நிலவின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கிய உலகின் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா அடைந்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர்

நாங்க இருக்கிறதே நிலாதான்; இங்கயும் அப்படிதான் இருக்கு - சந்திராயன் 3 குறித்து பாக். நபர் ஆதங்கம்! | Pakistanis Reaction On Indias Chandrayaan3 In Moon

இந்தியாவின் மிஷன் மூன் குறித்து தனது நாட்டு மக்களிடம் கருத்து கேட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், ஒருவர், ‘பணத்தை முதலீடு செய்து இந்தியா நிலாவிற்குச் சென்றுள்ளது.

வைரல் கருத்துகள்

ஆனால் நாங்கள் ஏற்கெனவே நிலவில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எப்படி நிலவில் மின்சாரமும் தண்ணீரும் இல்லையோ அப்படிதான் நாங்கள் இங்கு வாழ்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

நாங்க இருக்கிறதே நிலாதான்; இங்கயும் அப்படிதான் இருக்கு - சந்திராயன் 3 குறித்து பாக். நபர் ஆதங்கம்! | Pakistanis Reaction On Indias Chandrayaan3 In Moon

மற்றொருவர், சந்திரயான் 3-ன் நேரடி ஒளிபரப்பை குழந்தைகளுக்குக் காட்ட வேண்டும், அதனால் அவர்கள் இந்தியாவிடம் இருந்து விஞ்ஞானத்தைக் கற்றுக்கொள்ள முடியும் என்றார். தொடர்ந்து மற்றொரு ஊடக பேட்டியில், இந்திய நாட்டின் விண்கலம் நிலாவில் மட்டுமல்ல, செவ்வாய் கிரகத்திலும் தரையிரங்கலாம்.

இதிலிருந்து பாகிஸ்தான் மக்கள் கற்றுக்கொண்டது, கடந்த 77 ஆண்டுகளில், இந்தியா பல சாதனைகளை புரிந்துவிட்டது; ஆனால், இந்தியாவிடன் பகையை மட்டுமே பாகிஸ்தான் காப்பாற்றி வருகிறது. ஆகவே இந்த அரசு இந்தியாவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது எனத் தெரிவித்துள்ளனர்.