இப்படியெல்லாம் தோப்பாங்கனு நினைக்கல.. அவமானமா போச்சு - கொதித்த வாசிம் அக்ரம்!
பாகிஸ்தான் அணி தோல்வியடைந்திருப்பது அவமானத்தை கொடுத்திருப்பதாக வாசிம் அக்ரம் விமர்சித்துள்ளார்.
pak vs ban
வங்கதேசம் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி இழந்துள்ளது. சொந்த மண்ணில் நடந்த 10 டெஸ்ட் போட்டிகளில் 6 தோல்வி, 4 டிரா என்று ஹோம் சீசனை மோசமாக முடித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் பேசுகையில், பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இது மிகப்பெரிய பின்னடைவாகும். நாம் பயணிக்கும் பாதை மாறிவிட்டதாக நினைக்கிறேன். நாம் முன்னேறி செல்லாமல், தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறோம்.
வாசிம் அக்ரம் ஆதங்கம்
ஒரு முன்னாள் வீரராக, கிரிக்கெட் ரசிகராக அவமானமாக இருக்கிறது. ஏனென்றால் நல்ல நிலையில் இருந்து தோல்வியை சந்தித்துள்ளோம். இது எப்படி நடந்தது என்று தெரியவில்லை. சொந்த மண்ணில் நடந்த போட்டிகளை தொடர்ச்சியாக இழந்திருக்கிறோம்.
இதன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட்டை தரத்தை வெளிப்படையாக புரிந்து கொள்ள முடிகிறது. பாகிஸ்தான் உள்நாட்டு கிரிக்கெட்டிலும் போதுமான திறமையான வீரர்கள் இல்லை என்று கருதுகிறேன்.
எந்த வீரருக்காகவாது காயம் ஏற்பட்டால் கூட, அவர்களுக்கான பேக் அப் கூட நம்மிடம் இல்லை என ஆதங்கம் தெரிவித்துள்ளார்.