ரயில் கவிழ்ந்து கோர விபத்து; 30க்கும் அதிகமானோர் பலி - நடவடிக்கை தீவிரம்

Pakistan Accident Death
By Sumathi Aug 07, 2023 06:47 AM GMT
Report

ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கோர விபத்து

தெற்கு பாகிஸ்தான் பகுதியில் ஹவேலியன் – ஹசாரா இடையே விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சிந்து மாகாணத்தின் ஷாஹ்ஷாத்பூர் மற்றும் நவாப்ஷா இடையே உள்ள சர்ஹாரி ரயில் நிலையம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ரயில் கவிழ்ந்து கோர விபத்து; 30க்கும் அதிகமானோர் பலி - நடவடிக்கை தீவிரம் | Pakistan Train Accident 30 People Dead

ரயிலில் இருந்த 4க்கும் அதிகமான பெட்டிகள் கவிழ்ந்தன. இதனால் அதிலிருந்த பயணிகள் அபாயக்குரல் எழுப்பினர். பெட்டிகள் கவிழ்ந்து உடல் நசுங்கியதில் 30க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 80-க்கும் மேற்பட்டவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

 30 பேர் பலி

இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து, மீட்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரயில் கவிழ்ந்து கோர விபத்து; 30க்கும் அதிகமானோர் பலி - நடவடிக்கை தீவிரம் | Pakistan Train Accident 30 People Dead

சேதம் அதிகம் என்பதால் பாகிஸ்ரான் ராணுவ வீரர்களும் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும், மீட்பு பணிகளை ராணுவ தலைமை தளபதி அசிம் முனீர் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.