“விராட் கோலியே இப்படித்தான்” - பாகிஸ்தான் வீரர் கருத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ள விராட் கோலிக்கு பாகிஸ்தான் அணி வீரர் முகமது அமீர் பிரியாவிடை கொடுத்துள்ளது ரசிகர்களிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக திகழ்ந்த விராட் கோலி கடந்த சில தினங்களுக்கு அந்த பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் அதிர்ச்சியடைந்தது. இதனிடையே இந்திய அணியின் சிறந்த கேப்டன்களில் கோலிக்கு தனியிடம் உண்டு. அதை யாரும் மறுக்கவும் முடியாது. மறைக்கவும் முடியாது என்பதால் பலரும் விராட் கோலி குறித்த பல மலரும் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
@imVkohli brother for me u are a true leader of upcoming generation in cricket because u are inspiration for young Cricketers. keep rocking on and of the field. pic.twitter.com/0ayJoaCC3k
— Mohammad Amir (@iamamirofficial) January 15, 2022
அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் விராட் கோலி குறித்த ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பிரதர், என்னைப் பொறுத்தவரை நீங்கள் கிரிக்கெட்டில் அடுத்த தலைமுறையினரின் மெய்யான கேப்டன். ஏனென்றால் நீங்கள் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு இன்ஸ்பிரேஷன் தருகிறீர்கள். களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் விளையாடிக் கொண்டே இருங்கள்” என கூறியுள்ளார்.
மேலும் அந்த ட்வீட்டில் கோலியுடன் தான் இருக்கும் படத்தையும் பகிர்ந்துள்ளார் அமீர். அதோடு கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.