நள்ளிரவில் கலைக்கப்பட்ட நாடாளுமன்றம்..பரபரப்பான பாகிஸ்தான்..!
இம்ரான் கான் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், நேற்றிரவு பாகிஸ்தான் நாடாளுமன்றம் இரவோடு இரவாக கலைக்கப்பட்டுள்ளது.
இம்ரான் கான்
கடுமையான நிதி நெருக்கடி, நிலையற்ற ஆட்சி போன்ற எண்ணற்ற சவால்களை தற்போது பாகிஸ்தான் அரசு எதிர்கொண்டு வருகின்றது.
இம்ரான் கானின் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது அவரின் கட்சிக்கு ஆதரவளித்து வந்த விலகிக்கொள்ள அவர் தீர்மானத்தில் தோல்வியடைந்தார்.
ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் தலைவர் ஆட்சியை பிடித்து ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக பொறுப்பேற்ற கொண்டார்.
அதனை தொடர்ந்து இம்ரான் கான் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அரசு கருவூலப் பரிசுப் பொருட்கள் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கலைக்கப்பட்ட நாடாளுமன்றம்
பாகிஸ்தான் அரசின் பதவிக்காலம் இன்னும் 3 நாட்களில் முடிவடையுள்ள நிலையில், நேற்றிரவு திடீரென அந்நாட்டின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
ஆட்சியை தாமாக முன்வந்து கலைத்துள்ளதால் தேர்தல் எதிர்கொள்ள 90 நாட்கள் அவகாசம் இருக்கும் என்பதால் தான் ஷெபாஸ் ஷெரீப் நாடாளுமன்றத்தை கலைத்துள்ளார் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்தியாவை போலவே பாகிஸ்தானிலும் ஒரு ஆட்சி காலம் 5 ஆண்டுகள். அவ்வாறு 5 ஆண்டுகள் பதவிக்காலம் முடிந்தால் பிறகு, 60 நாட்களில் தேர்தலை சந்திக்கவேண்டும், அதற்கு முன்னதாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், தேர்தலை சந்திக்க கூடுதலாக 30 நாட்கள் அதாவது 90 நாட்களுக்குள் தேர்தலை நடத்திக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.