பாகிஸ்தானுக்கு இந்திய அணி வரவில்லை என்றால் நகரத்துக்குதான் செல்ல வேண்டும் - பாக். முன்னாள் கேப்டன் காட்டம்...!

Pakistan national cricket team
By Nandhini Feb 07, 2023 10:47 AM GMT
Report

பாகிஸ்தானுக்கு இந்திய அணி வரவில்லை என்றால் நகரத்துக்குதான் அவர்கள் செல்ல வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது

6 அணிகள் பங்கேற்கும் 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது.

இது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா செய்தியாளர்களிடம் பேசுகையில், 2023ம் ஆண்டின் ஆசிய கோப்பை தொடரில் விளையாடுவதற்கு இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது. மேலும், வேறு ஒரு பொதுவான இடத்தில் ஆசிய கோப்பை தொடர் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

இவரின் இந்த பேச்சுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் கூட்டம்

இதனையடுத்து, இது தொடர்பாக முடிவு எடுக்க பக்ரைனில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் நேற்று முன்தினம் கூட்டத்தை நடத்தியது. பாகிஸ்தானுக்கு சென்று விளையாட வாய்ப்பில்லை என்று இந்தியாவும், தங்கள் நாட்டில் தான் ஆசிய கோப்பை போட்டியை நடத்தியாக வேண்டும் என்பதில் பாகிஸ்தானும் விடாப்பிடியாக இருந்தது. இதனால், கூட்டத்தில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை.

pakistan-cricket-india-javed-miandad

நகரத்துக்குதான் செல்ல வேண்டும்

இந்நிலையில் ஆசிய கோப்பை விவகாரத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இந்தியாவை நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்டட் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் பேசுகையில்,

இந்திய அணி பாகிஸ்தான் வரவில்லை என்றால் எங்களுக்கு கவலை கிடையாது. நான் இதை எப்போதும் சொல்லிக்கொண்டு தான் வருகிறேன். எங்களிடம் போட்டியை நடத்தும் உரிமை உள்ளது. ஐ.சி.சி.யால் அங்கீகரிக்கப்பட்ட இடங்களுக்கு எல்லா அணிகளும் செல்ல வேண்டும். எல்லா நாட்டுக்கும் ஒரு விதியை வைத்திருக்கத்தான் வேண்டும். அணிகள் விளையாட மறுத்தால் அவர்கள் எவ்வளவு பலமாக இருந்தாலும் ஐ.சி.சி. அவர்களை நீக்க வேண்டும்.

பாகிஸ்தான் மண்ணில் விளையாடுவதற்கு இந்தியா பயப்படுவது எதற்காக? பாகிஸ்தானிடம் தோற்றால் இந்திய ரசிகர்கள் எளிதில் விட்டு விடமாட்டார்கள் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தெரியும்போல. விளைவுகளை பற்றி அவர்கள் பயப்படுகின்றார்கள்.

பாகிஸ்தானுக்கு இந்திய அணி வரவில்லை என்றால் நகரத்துக்குதான் அவர்கள் செல்வார்கள். இந்த விவகாரத்தில் ஐ.சி.சி. தலையிட்டு இந்தியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஜாவித் மியான்டட் கூறியுள்ளார்.