விரைவில் இந்தியாவுடன் போர் - அணு ஆயுதத்துடன் மிரட்டிய ராணுவத் தளபதி!

Pakistan India
By Sumathi Aug 12, 2025 10:50 AM GMT
Report

இந்தியாவுடனான எதிர்காலப் போரில் பாதி உலகத்தை அழிப்போம் என பாகிஸ்தான் ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

ராணுவத் தளபதி அசிம் முனீர்

பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர், இரண்டாவது முறையாக அமெரிக்காவின் புளோரிடாவிற்குச் சென்றுள்ளார். அங்கு டம்பாவின் கௌரவ தூதராகப் பணியாற்றும் தொழிலதிபர் அட்னான் ஆசாத், முனீருக்காக இரவு உணவு விருந்தளித்தார்.

விரைவில் இந்தியாவுடன் போர் - அணு ஆயுதத்துடன் மிரட்டிய ராணுவத் தளபதி! | Pakistan Army Chief Nuclear Threat In India War

பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த 120 பேர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதில் பங்கேற்பாளர்கள் செல்போன்கள் அல்லது பிற டிஜிட்டல் சாதனங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

அந்த விருந்து நிகழ்வின்போது பேசிய அசிம் முனீர், “சிந்து நதி நீர் வழித்தடங்களில் இந்தியா கட்டும் எந்தவொரு உள்கட்டமைப்பையும் பாகிஸ்தான் அழிக்கும். இந்தியா ஓர் அணை கட்டும் வரை நாங்கள் காத்திருப்போம்.

ஒரு நாட்டையே உருவாக்கி அதிபரான 20 வயது இளைஞர் - எப்படி பாருங்க!

ஒரு நாட்டையே உருவாக்கி அதிபரான 20 வயது இளைஞர் - எப்படி பாருங்க!

இந்தியாவுக்கு மிரட்டல்

அது அவ்வாறு செய்யும்போது, 10 ஏவுகணைகளைப் பயன்படுத்தி அதை அழிப்போம். எங்களுக்கு ஏவுகணைகளுக்குப் பஞ்சமில்லை. நாங்கள் ஓர் அணு ஆயுத நாடு. நாங்கள் வீழ்ச்சியடைகிறோம் என்று நினைத்தால்,

விரைவில் இந்தியாவுடன் போர் - அணு ஆயுதத்துடன் மிரட்டிய ராணுவத் தளபதி! | Pakistan Army Chief Nuclear Threat In India War

பாதி உலகத்தையும் எங்களுடன் வீழ்த்துவோம். சிந்து நதி இந்தியர்களின் குடும்பச் சொத்து அல்ல. இது, பாகிஸ்தானுக்கு நீர் ஓட்டத்தைத் தடுக்கக்கூடும். ஏப்ரல் மாதம் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்திவைக்க இந்தியா எடுத்த முடிவு

250 மில்லியன் மக்களை பட்டினியால் வாடும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும். இந்தியா ஒளிர்கிறது, ஒரு மெர்சிடிஸ் ஒரு ஃபெராரி போன்ற நெடுஞ்சாலையில் வருகிறது, ஆனால் நாம் சரளைக்கற்களால் நிறைந்த ஒரு குப்பை லாரி.

லாரி காரை மோதினால், யார் தோல்வியடைவார்கள். இந்தியாவின் கிழக்கிலிருந்து நாம் தொடங்குவோம். அங்கு அவர்கள் மிகவும் மதிப்புமிக்க வளங்களை வைத்திருக்கிறார்கள். பின்னர் மேற்கு நோக்கி நகர்வோம்” எனத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.