பாகிஸ்தான் நடிகையுடன் நெருக்கமாக ஷாருக்கான் மகன் - சர்ச்சைக்குள்ளான ஃபோட்டோ!
பாகிஸ்தான் நடிகையுடன் பார்ட்டியில் ஷாருக்கான் மகன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஆர்யன் கான்
சொகுசு கப்பலில் போதை விருந்தில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கலந்து கொண்டதாக அதிரடியாக அவர் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மகனை ஜாமினில் எடுக்க ஷாருக்கான் பெரிய போராட்டத்தையே நடத்தினார்.
கடைசியில் ஆர்யான் கான் மீது எந்த தவறும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பாகிஸ்தான் நடிகை சாடியா கான் உடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நடிகை சாடியா கான் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
சர்ச்சை ஃபோட்டோ
இருவரும் காதல் செய்கின்றனரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். முன்னதாக, பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹியுடன் ரொம்ப நெருக்கமாக ஷாருக்கான் மகன் ஆர்யான் கான் இருக்கும்
புகைப்படம் வெளியாகி பெரும் புயலை கிளப்பியது ஒரு பக்கம். அதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.