திருச்சி மாவட்டத்தில் இருவருக்கு பத்மஸ்ரீ விருது - மத்திய அரசு அறிவிப்பு

award trichy padmashri
By Irumporai Jan 26, 2022 09:47 AM GMT
Report

நாட்டின் 73வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் பத்ம விருது பெறுவோர் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் முன்னாள் முப்படைத் தளபதி பிபின் ராவத், உத்தரப்பிரதேச முன்னள் முதல்வர் கல்யாண் சிங், ராதேஷ்யாம் கெம்கா, பிரபா அத்ரே ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்தவர்கள் 7 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இலக்கியம் மற்றும் கல்விக்காக சிற்பி பாலசுப்பிரமணியன், கலைக்காக பல்லேஷ் பஜண்ட்ரி, சமூகப் பணிக்காக எஸ்.தாமோதரன், கலைக்காக சவுக்கார் ஜானகி, கலைக்காக முத்துக்கண்ணம்மாள், கலைக்காக ஏ.கே.சி.நடராஜன், மருத்துவத்திற்காக வீராசாமி சேஷையா ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரியை சேர்ந்த தவில் கொங்கம்பட்டு ஏ.வி.முருகையனுக்கு கலைக்கான பத்மஸ்ரீ விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் தலைவரும், தமிழக வம்சாவளியை சேர்ந்தவருமான சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், சமூக சேவகர் தாமோதரன் மற்றும் இசைக்கலைஞர் ஏ.கே.சி.நடராஜன் ஆகியோர் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.