“எல்லாம் பசங்களும் அட்டக்கத்திங்க தான்..ஏன் நானே ஒரு அட்டக்கத்தியா தான் இருந்தேன்” - பா.ரஞ்சித் பகிர்ந்த சுவாரஸ்ய கதை

kollywood pa.ranjith tamil director attakathi 2012 film
By Swetha Subash Jan 24, 2022 06:23 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக வலம்வருபவர் இயக்குனர் பா.ரஞ்சித்.

கடந்த 2012-ம் ஆண்டு நடிகர் தினேஷ் நடிப்பில் அட்டக்கத்தி படத்தை இயக்கி முதன் முதலாக இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இவர்.

தற்போது தனது முதல் படமான அட்டக்கத்தி திரைப்படத்தின் கதை உருவான சுவாரஸ்யம் குறித்து பகிர்ந்துள்ளார் ரஞ்சித்.

அதன்படி, பா.ரஞ்சித் கல்லூரியில் படிக்கும் சமயங்களில் அவருக்கு ஒரு நண்பர் இருந்திருக்கிறார். அவர் எப்போதுமே ஏதாவது ஒரு பெண் பின்னால் சுற்றிக்கொண்டிருப்பாராம்.

அந்த பெண் காதலிக்க மறுத்துவிட்டால் , பா.ரஞ்சித்திடம் வந்து, “ அவ சரியான மொக்க ஃபிகர் மச்சி “என கூறுவாராம்.

மேலும் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் சமயங்களில் ஏதேனும் பெண்ணை கண்டால் , அப்படியே அந்த பெண் பின்னால் சென்று விடுவாராம்.

அப்படியான தருணங்களில் ரஞ்சித் பயன்படுத்திய வார்த்தைதான் அட்டக்கத்தியாம்.

சரி இதனை கதைக்களமாக கொண்டு ,இப்படியாக வேறு யாராவது இருக்கிறார்களா என களத்தில் இறங்கிய பா.ரஞ்சித்திற்கு பிறகுதான் தெரிந்திருக்கிறது எல்லா இளைஞர்களுமே அட்டக்கத்தியாகத்தான் இருந்திருக்கிறார்கள் என்று.

”நானும் அட்டக்கத்தியாகத்தான் இருந்தேன் “ என்கிறார் ரஞ்சித்.

இப்படியான இளைஞர்கள் காதலை கொண்டாட்டமாக பார்க்கிறார்கள் என்னும் ரஞ்சித் , அந்த பெண்ணுக்காக அவன் நடை, உடை என தன்னை மேம்படுத்த தொடங்குவதில்தான் இந்த கொண்டாட்டம் துவங்குகிறது என்கிறார்.

இதை எல்லாம் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் அட்டக்கத்தி படத்தை ரஞ்சித் எடுத்தாராம்.