ஆக்சிஜன் நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் கடன்

bank loan oxygen supply
By Praveen May 01, 2021 10:05 PM GMT
Report

ஆக்சிஜன் நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் வங்கி கடன் வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆக்சிஜன் வினியோகம் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டிருக்கும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், 4.5 - 6 சதவீத வட்டியில் கடன்களை விரைவாக பெற்றுக் கொள்ளலாம் என, 'சிட்பி' எனும், இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கி அறிவித்துள்ளது.

இது குறித்து, இவ்வங்கி மேலும் தெரிவித்து உள்ளதாவது:'கொரோனா இரண்டாவது அலைக்கு எதிரான போரில், சுகாதார துறைக்கு சிட்பியின் உதவி' எனும் திட்டத்தின் கீழ், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு விரைந்து கடன் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ், ஆக்சிஜன் சிலிண்டர் தயாரிப்பு நிறுவனங்கள், ஆக்சிஜன் ஜெனரேட்டர்ஸ், ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்ஸ், திரவ ஆக்சிஜன், ஆக்சிஜன் போக்குவரத்து சேவை, சேமிப்பகம் போன்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள் கடன் பெறலாம்.

மேலும், கொரோனா தடுப்பில் முக்கிய பங்காற்றும், ஆக்ஸிமீட்டர், அனுமதிக்கப்பட்ட மருந்துகள், வென்டிலேட்டர்கள் முழுகவச உடை போன்ற தயாரிப்புகளில் உள்ள நிறுவனங்களுக்கும், குறைந்த வட்டியில், விரைவான கடன் வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் நிறுவனங்களுக்கு, 2 கோடி ரூபாய் வரை, ஆண்டுக்கு, 4.5 - 6 சதவீத வட்டியில், தகுந்த விண்ணப்பங்கள் பெற்ற, 48 மணி நேரத்தில் கடன் வழங்கப்படும்.இவ்வாறு தெரிவித்து உள்ளது.