எங்களுக்கு பயமா இருக்கு .. நாக்கை கடித்து மிரட்டினான்... விஜே சித்ராவின் தாய் பரபரப்பு குற்றச்சாட்டு
தங்களின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக மறைந்த விஜே சித்ராவின் தாய் குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல விஜேவாகவும் சின்னத்திரை நடிகையாகவும் இருந்தவர் விஜே சித்ரா. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாக இருந்தார்.
விஜே சித்ரா மரணமடைந்து ஓராண்டு கடந்துவிட்ட நிலையில் தற்போது வரை திடுக்கிடும் தகவல் தினம் தோறும் ஒரு தகவல் வெளியாகிவருகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் தனது காதல் கணவர் ஹேமந்துடன் சென்னை நசரத் பேட்டையில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில்சித்ரா சடலமாக மீட்கப்பட்டார்.
சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் அவரது கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டு 2 மாத சிறையில் இருந்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில் சித்ரா மரணத்திற்கு காரணமானவர்களால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனால் சித்ரா வழக்கு மீண்டும் சூடு பிடித்தது. இந்நிலையில் விஜே சித்ராவின் அம்மா இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
அதில் இப்போது ஹேமந்த் சொல்வதை 2 வருஷத்துக்கு முன்பே சொல்ல வேண்டியதுதானே. எம்எல்ஏவுக்கு தொடர்பு இருக்கு மற்றவர்களுக்கு தொடர்பு இருக்கு என்பதை அப்போதே சொல்லியிருந்தால், ரெண்டு குடும்பமும் சேர்ந்து காவல்துறையில் புகார் கொடுத்திருக்கலாமே.
ரெண்டு வருஷமா அமைதியா இருந்துட்டு இப்போ வந்து ஏன் சொல்லணும்? 2 வருஷமா போதையில இருந்து இப்போதான் தெளிஞ்சியா? இல்ல கோமாவில் இருந்தீயா? இப்போவரைக்கும் எனக்கு போன் பண்ணல. எங்க மகள் தற்கொலை பண்ணல கொலைதான்.
தப்பு பண்ணவங்களுக்கு தண்டனை கிடைக்கணும். எங்களுக்கு பயமா இருக்கு. நான் கடைக்கு போயிட்டு வரும் போது பைக்கில் சென்ற ஒருத்தன் நாக்கை கடித்து கொன்றுவிடுவேன் என்று விரலை காட்டிவிட்டு போனான்.
எங்களுக்கு பயமா இருக்கு. ஹேமந்தால எங்க உயிருக்கு ஆபத்து இருக்கு, இவ்வாறு அந்த பேட்டியில் விஜே சித்ராவின் அம்மா கூறியுள்ளார்.