ஓடிடி ல படம் வந்தா நல்லது தான்- நடிகர் விஷ்ணு விஷால்
இன்று முதல் திரையரங்குகளில் 100 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகியுள்ள FIR திரைப்படத்தின் குழுவினர் கோவை தனியார் திரையரங்கிற்கு பார்வையிட வந்தனர்
அப்போது செய்தியாளர்களுக்கு பேசிய நடிகர் விஷ்ணு விஷால் கொரோனாவிற்கு பிறகு பொதுமக்கள் திரை அரங்கிற்கு வருகை புரிவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
இந்த படத்தில் மதத்தை தவறாக சித்தரிக்கும் வகையில் எதுவும் செய்யவில்லை எனவும் சிலர் அதனை தவறாக புரிந்து கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்த நடிகர் விஷ்ணு விஷால் ஓடிடியில் திரைப்படங்கள் வெளியிடப்படுவது நல்லது தான் எனினும் திரையரங்கிற்கான வரவேற்பு என்றும் குறையாது என தெரிவித்தார்.
மேலும், தன்னை பொறுத்தவரை சினிமா என்பது வியாபாரம் தான் என தெரிவித்த அவர் அதனை கமர்ஷியலாக இருக்கும் பொழுது சில நெகடிவ் விமர்சனங்கள் வருவது இயல்புதான் அதனை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என தெரிவித்தார்.