யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்ட வழக்கு : மோகன்லால் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
Mohanlal
By Irumporai
கடந்த சில வருடங்களுக்கு முன் மலையாள பட உலகில் முன்னணி நடிகர் மோகன்லாலின் கொச்சி, சென்னை, திருவனந்தபுரம் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
இதில் கொச்சி வீட்டிலிருந்து யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டன.இது தொடர்பாக மோகன்லால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது .இந்த வழக்கு பெரும்பாவூர் குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த நிலையில், தற்போது இந்த வழக்கின் கேரள அரசின் வாபஸ்மனுவை நீதிமன்றம் நிராகரித்து, மோகன்லால் மீது மேல்நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.