மாணவிகளின் குளியல் காட்சிகள் வெளியான விவகாரம் - பல்கலைக்கழகத்தை மூட உத்தரவு

India
By Thahir Sep 19, 2022 05:58 AM GMT
Report

சண்டிகர் பல்ககலை கழகத்தில் மாணவிகளின் குளியல் காட்சிகள் வெளியான நிலையில் மீண்டும் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்தால் பல்கலைக்கழகத்தை செப்டம்பர் 24-ந் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

வீடியோ காட்சிகள் லீக்?

சண்டிகர் பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் சக மாணவிகளின் குளிக்கும் வீடியோ காட்சிகளை ரகசிய கேமரா வைத்து எடுத்து தனது ஆண் நண்பர் ஒருவருக்கு அனுப்பிய நிலையில் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியானதாக கூறி மாணவர்கள் சனிக்கிழமை இரவு பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவிகளின் குளியல் காட்சிகள் வெளியான விவகாரம் - பல்கலைக்கழகத்தை மூட உத்தரவு | Order To Close Chandigarh University

இதையடுத்து வீடியோ காட்சிகளை வெளியிட்டதாக கூறப்படும் மாணவியை போலீசார் கைது செய்தனர். வீடியோக காட்சிகள் வெளியான நிலையில் மன உளைச்சலால் 7 மாணவிகள் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் பரவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விடுமுறை அறிவிப்பு 

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர் பல்கலைக்கழக நிர்வாகமும், போலீசாரும். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக 2 பேரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவிகளின் குளியல் காட்சிகள் வெளியான விவகாரம் - பல்கலைக்கழகத்தை மூட உத்தரவு | Order To Close Chandigarh University

சட்டீஷ்கர் பல்கலைக்கழகத்தில் மீண்டும் மாணவர்கள் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதால் செப்டம்பர் 24-ம் தேதி வரை விடுமுறை அளித்து பல்கலைக்கழக நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதனால் விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.