புதிய திட்டம் போட்ட ஓபிஎஸ் - குஜராத்தில் பாஜக நிர்வாகிகளை சந்திக்க திட்டம்
ஓ.பன்னீர்செல்வம் பாஜகவின் முக்கிய பிரதிநிதிகளை சந்திக்க குஜராத்திற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பரபரப்பான சூழலில் ஓபிஎஸ் குஜராத் பயணம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் திடீரென குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு காலையில் புறப்பட்டுள்ளார். அகமதாபாத்தில் தமிழர்கள் அதிகம் வசித்து வரும் சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொள்ள அழைப்பு கொடுக்கப்பட்டதை அடுத்து அவர் பயணம் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஓ.பன்னீர்செல்வத்துடன் மனோஜ் பாண்டியன் உள்பட 3 பேர் பயணம் செய்கின்றனர். மேலும் குஜராத்தில் முக்கிய பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.