திமுகவில் இருந்து விலகலா? திடீரென ஓபிஎஸ் - தங்கத்தமிழ்செல்வன் சந்திப்பு
திமுகவில் இருந்து வரும் தங்கத்தமிழ்செல்வன் அண்மையில் திடீரென ஓபிஎஸ்'ஸை சந்தித்து பேசியுள்ள சம்பவம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்கத்தமிழ்செல்வன்
தேனீ மாவட்டத்தில் அதிமுகவில் பெரும் செல்வாக்குமிக்க நபராக இருந்து வந்தவர் தங்கத்தமிழ்செல்வன். அதே நேரத்தில் அதிமுகவில் தேனீ சுற்றுவட்ட இடங்களில் பெரும் ஆதிக்கத்தை தற்போதும் செலுத்தி வருபவர் ஓபிஎஸ்.
அதிமுகவில் இருந்து போதே இவ்விருவருக்கும் பெரும் புகைச்சல் இருந்து வந்தது. இருப்பினும் ஒரே கட்சியில் பயணித்த இருவரில், தங்கத்தமிழ்செல்வன் திமுகவில் இணைந்து தற்போதும் கட்சியில் நீடித்து வருகிறார். கடந்த 2019-ஆம் தேர்தலில் ஓபிஎஸ்ஸை தோற்கடித்தாக வேண்டுமென பெரும் முயற்சிகளை செய்த தங்கத்தமிழ்செல்வன் அதில் தோற்ற நிலையில், தற்போது ஓபிஎஸ்ஸை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
கட்சியில் இணைகிறாரா?
பெரியகுளத்தில் இருக்கும் ஓபிஎஸ்ஸின் வீட்டில் அவரை நேரில் சந்தித்த தங்கத்தமிழ்செல்வன் சிறிது நேரம் கலந்தாலோசித்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக தற்போது தங்கத்தமிழ்செல்வன் மீண்டும் அதிமுகவில் இணையவுள்ளாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.
கழக ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு ஐயா திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்களை, நேரில் சந்தித்து
— Theni Jayamani போடி கிழக்கு ஒன்றிய கழகம் (@JAYAMAN91912004) August 13, 2023
தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் திரு. தங்க தமிழ்செல்வன் Ex-MLA அவர்கள் தனது இல்ல திருமண விழா அழைப்பிதழை பெரியகுளம் இல்லத்தில் நேரில் சந்தித்து வழங்கினார்... pic.twitter.com/QIi4lPPocp