ஜனவரி 6ல் கோவையில் ஒ.பன்னீர்செல்வம் அணி மாநாடு - மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு!

Tamil nadu ADMK O. Panneerselvam
By Jiyath Oct 12, 2023 02:38 AM GMT
Report

ஜனவரி 6ம் தேதி கோவையில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மாநாடு நடைபெறும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது

மாவட்ட செயலாளர் கூட்டம்

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான ஆதரவு மாவட்ட செயலாளர் கூட்டம் சென்னை எழும்பூரில் நடைபெற்றது. இதில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஜனவரி 6ல் கோவையில் ஒ.பன்னீர்செல்வம் அணி மாநாடு - மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு! | Ops District Secretaries Meeting Decided

இந்த கூட்டத்தில் ஜனவரி 6ம் தேதி கோவையில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மாநாடு நடைபெறும் என முடிவு செய்யப்பட்டுள்ளது . மேலும் அதிமுக 52வது தொடக்க நாளை மையமாக வைத்து தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்களையும், நிர்வாகிகளையும் ஒன்றிணைக்கும் வகையில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

பேட்டி

இந்த கூட்டத்தற்கு பின்னர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது "நாங்கள்தான் அதிமுக, இரட்டை இலை வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில்தான் இருக்கிறது. பாஜக தேசிய தலைமை உடன் நட்பின் அடிப்படையில் பேசி வருகிறேன். கூட்டணி குறித்து பேசவில்லை” என தெரிவித்தார்.