ஓபிஎஸ்-க்கும் மகனுக்கும் எங்கள் கட்சியுடன் எந்த சம்பந்தமும் இல்லை - ஜெயக்குமார் !
ஓபிஎஸ்-க்கும் அவரது மகனுக்கும் அதிமுக கட்சியுடன் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஓ.பி. ரவீந்திரநாத்
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பாக ஓ.பன்னீர்செல்வம் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் போட்டியிட்டு சுமார் 76 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அந்த தேர்தலில் ஓ.பி.ரவீந்திரநாத் அதிக அளவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தார், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார். எனவே தேர்தலை செல்லாது என அறிவிக்க வேண்டும் என தேனி தொகுதியை சேர்ந்த மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில், ஓ.பி. ரவீந்திரநாத் 2019 தேனி தொகுதியில் பெற்ற வெற்றி செல்லாது என தீர்ப்பு வழங்ப்பட்டுட்டது.
ஜெயக்குமார் பேட்டி
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் " ஓபிஎஸ் க்கும் அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத்துக்கும் அதிமுக கட்சிக்கும் எந்தவித தொடர்பும், சம்பந்தம் இல்லை. தனது அருமை மகன் மட்டும் வெற்றிபெற்றால் போதும் என நினைத்து ஓபிஎஸ் பணத்தை வாரி வாரி இறைத்தார்" இதைத்தான் இன்று நீதி மன்றம் சொல்லியிருக்கிறது. எனவே அவருக்கும் அதிமுக கட்சிக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்தார்.