ஆப்ரேசன் கஞ்சா: 2000 ஆயிரம் வங்கி கணக்குகள் முடக்கம்
ஆப்ரேசன் கஞ்சா வேட்டையில் மொத்தமாக தமிழகம் முழுவதும் உள்ள கஞ்சா வியாபாரிகளின் 2000 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அதிகரித்துள்ள கஞ்சா பழக்கத்தை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஆப்ரேசன் கஞ்சா வேட்டையை நடத்த டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.
வங்கி கணக்குகள் முடக்கம்
இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் கஞ்சா சோதனை வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் கஞ்சா ஆப்ரேசன் 2.0 என்ற சோதனை இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் ஏராளமான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று கஞ்சா வியாபாரிகளின் 2000 ஆயிரம் வங்கி கணக்குகளை தமிழக போலீசார் முடக்கியுள்ளனர்.
2000 ஆயிரம் வங்கி கணக்கில் இருந்து 50 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் பணம் ஆகியவை முடக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.