53 ஆண்டுகளாக தொடரும் வெற்றி....இடைத்தேர்தலில் உம்மன் சாண்டி மகன் அபார வெற்றி.!!
நடைபெற்று முடிந்த கேரள சட்டமன்ற புதுப்பள்ளி தொகுதிக்கான இடைத்தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மகன் சாண்டி உம்மன் அபார வெற்றி பெற்றுள்ளார்.
உம்மன் சாண்டி
கேரளாவின் முன்னாள் முதல் மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான உம்மன் சாண்டி கேரள அரசியலில் கடந்த 50 ஆண்டுகளாக முக்கிய இடத்தை வகித்து வந்தார். கோட்டயம் பகுதியில் அமைந்ததுள்ள புதுப்பள்ளி தொகுதியில் கடந்த 1970-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தார்.
கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் அவர் இதே தொகுதியில் இருந்து வெற்றி பெற்று நிலையில், அவர் ஜூலை மாதம் 18 ஆம் தேதி காலமானார்.அதன் காரணமாக இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
சாண்டி உம்மன் வெற்றி
அதில் அவரது மகன் சாண்டி உம்மன், வேட்பாளராக களமிறங்கினார். கடந்த 5 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இன்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியின் சாண்டி உம்மன் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளார்.
10 ஆவது சுற்றின் முடிவில் சிபிசி (எம்) வேட்பாளரை விட 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் ஜெயிக் தாமஸ்ஸை சாண்டி உம்மன் தோற்கடித்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து புதுப்பள்ளி தொகுதியில் 53 ஆண்டுகளாக உம்மன் சாண்டி குடும்பத்தினர் வெற்றி பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.