ஓ சொல்றியா பாடல் தேசிய கீதம்..கலைப்புலி தாணு சர்ச்சை பேச்சு

Rashmika Allu Arjun Oo Solriya |Pushpa Songs Kalaippuli S Thanu
By Thahir Dec 15, 2021 05:28 AM GMT
Report

இன்றைய காலத்து குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் 'ஓ சொல்றியா மாமா' தேசிய கீதம் என்று கலைப்புலி எஸ்.தாணு தெரிவித்துள்ளார்.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவான ‘புஷ்பா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் , மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.

புஷ்பா படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. முதல் பாகம் வரும் 17ஆம் தேதி வெளியாகிறது. இந்தநிலையில், சென்னையில் ‘புஷ்பா’ படக்குழு செய்தியாளர்களை சந்தித்தது.

இந்த நிகழ்ச்சியில் படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு மற்றும் இயக்குனர் சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்பொழுது செய்தியாளர்கள் ஒருவர் நடிகர் அல்லு அர்ஜுனிடம் ‘ஓ சொல்றீயா..’ பாடல் குறித்து செய்தியாளர் ஒருவர் அல்லு அர்ஜூனிடம், இந்தப் பாட்டு மிகப்பெரிய ஹிட்டாகியுள்ளது.

அதேநேரத்தில் அந்தப் பாடலின் வரிகளுக்கு, ஆண்கள் எதிர்ப்பும் தெரிவிக்கிறார்கள். நீங்களும் ஒரு ஆண் தான், நீங்க எப்படி ஃபீல் பண்றீங்கனு கேட்க, அப்படியே மைக்கை தேவி ஸ்ரீ பிரசாத்திடம் திருப்பும் அல்லு அர்ஜூன், ‘உண்மைதானே’ என்று சிரிப்புடன் கூற, அருகில் இருக்கும் அனைவரும் சிரித்தனர்.

அதனைத்தொடர்ந்து, இந்த 'ஓ சொல்றியா மாமா' பாடல் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கலைப்புலி எஸ்.தாணு கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர், 'ஓ சொல்றியா மாமா' என்ற வார்த்தையை கூட சரியாக கேட்காமல் ஓ மாமா வரியா என்று பாடலாசிரியர் விவேகா எழுதிய பாடலுக்கு பதிலாக இவர் பாட்டுக்கு ஒரு பாடலை பாடியுள்ளார்.

இன்றைய காலத்து குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் 'ஓ சொல்றியா மாமா' தேசிய கீதமாம். தற்போது இந்த பாடல் தான் பட்டித்தொட்டி எங்கும் ஹிட் என்று குறிப்பிட்டுள்ளார்.

கலைப்புலி எஸ்.தாணு பேசிய இந்த கருத்தை கேட்டு ஆடிப்போன ஆண்கள் சங்கம் தற்போது அவருக்கு எதிராக வன்மையான கண்டனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

முன்னதாக, இந்த பாடலில் உள்ள வரிகள் பெண்களின் உருவ கேலி, நிற கேலி உள்ளிட்டவை குறித்து பேசுவதாக இருக்கிறது.

அத்துடன், ஆண்கள், பெண்கள் குறித்து என்னென்ன நினைக்கிறார்கள் என்பது போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹைதராபாத்தில் ஆண்கள் சங்கத்தினர் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.