புஜாராவால் மட்டுமே இப்படி விளையாட முடியும் - சச்சின் டெண்டுல்கர்
டெஸ்ட் போட்டியில் புஜாரா தலை சிறந்த பேட்ஸ்மேன் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பகழாரம் சூட்டியுள்ளார்
. இந்தியா, நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி இங்கிலாந்து சௌதாம்ப்டான் மைதானத்தில் வருகின்ற ஜூன் 18 முதல் 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் பங்கேற்றக செதேஷ்வர் புஜாரா சிறப்பான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில்:
புஜாராவின் பேட்டிங் குறித்து பேசியுள்ளார்.அதில்,புஜாரா இந்திய அணிக்காக செய்த சாதனைகள் பற்றி நாம் உண்மையில் பாராட்ட வேண்டும். எல்லாரவீரர்களும் புஜாரா அளவுக்குத் திறமை வாய்ந்தவர்கள் எனச் சொல்லவிட முடியாது.
Sachin came out in support of Pujara, said- India has got immense success due to his batting style #WTCFinals #WTCFinal2021 #WTC21 #TeamIndia pic.twitter.com/9YLwWD9W73
— Fan Club Cricket2021 (@FCricket2021) June 16, 2021
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் புஜாரா சிறந்த பேட்ஸ்மேன். புஜாரா பேட்டிங் செய்யும் போது பந்து வீசும் பந்து வீச்சாளரைத் திணறடிக்க செய்கிறார்.
தற்போதைய காலகட்டத்தில் 20 ஓவர் போட்டிகள் தான் அதிகம் பேசப்படுகிறது. சிக்ஸர் அடிக்கும் வீரர்கள் தான் சிறந்த பேட்ஸ்மன்கள் என்று கூறுகிறார்கள்என தெரிவித்தார்.