சொந்தமாக ரயில் வைத்திருந்த ஒரே இந்தியர் இவர்தான்.. ஆச்சர்ய தகவல்!
சொந்தமாக ரயில் வைத்திருந்த இந்தியர் குறித்த தகவல்களை பார்ப்போம்.
நில வழக்கு
கடந்த 2007-ஆம் ஆண்டு லூதியானா-சண்டிகர் ரயில் பாதைக்காக, ரயில்வே சில நிலங்களைக் கைப்பற்றியது. அதில், கட்டானா கிராமத்தை சேர்ந்த சம்பூரன் சிங் என்பவரது நிலமும் கைப்பற்றப்பட்டது.
ஒரு ஏக்கருக்கு ரூ.71 லட்சம் மட்டுமே வழங்கியதால், அவர் வழக்கு தொடர்ந்து ரூ.1.47 கோடி இழப்பீடு வழங்க ரயில்வே-க்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், ரயில்வே ரூ.42 லட்சத்தை மட்டுமே வழங்கியுள்ளது. எனவே, மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
ரயிலுக்கே ஓனரான நபர்
அங்கு நீதிபதி ஜஸ்பால் வர்மா, செலுத்தப்படாத தொகையை திரும்பப் பெறுவதற்காக டெல்லி-அமிர்தசரஸ் ஸ்வர்ன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலையும் லூதியானாவின் ஸ்டேஷன் மாஸ்டர் அலுவலகத்தையும் ஜப்தி செய்வதாகத் தெரிவித்தார். இதனையடுத்து ரயில் நிலையத்திற்குச் சென்ற சிங், ரயிலின் உரிமையைப் பெற்றார்.
இருப்பினும், நீதிமன்ற உத்தரவின்பேரில் ரயில் சிறிது நேரத்திலேயே விடுவிக்கப்பட்டது. இதனால், சம்பூரன் சிங் 5 நிமிடங்கள் மட்டுமே ரயிலின் உரிமையாளராக இருந்தார். இந்த வழக்கு இன்றும் நிலுவையில் உள்ளது. இதன்மூலம் த ஒரு ரயிலின் உரிமையை இந்தியாவில் பெற்ற ஒரே நபர் என்ற பெயரை சம்பூரன் சிங் பெற்றார்.