சபரிமலை ஐயப்பனை தரிசிக்க இது கட்டாயம் - அமைச்சர் முக்கிய அறிவிப்பு

Kerala Sabarimala
By Thahir Oct 13, 2023 11:34 AM GMT
Report

ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே சபரிமலை ஐயப்பன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி என தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆன்லைன் பதிவு கட்டாயம் 

இது குறித்து கேரள அமைச்சர் ராதாகிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசிய போது நவம்பர் 16ஆம் தேதி மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

Online registration is mandatory at Sabarimala

மேலும் நவம்பர் மாதம் ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் ஆன்லைனில் அனுமதி பெறாத பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்