ராஜஸ்தானில் 9 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு: இந்தியாவில் 21 ஆக உயர்வு

India Rajasthan High Omicron
By Thahir Dec 05, 2021 04:02 PM GMT
Report

ராஜஸ்தானில் 9 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் மொத்த பாதிப்பு 21 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த சூழலில், உருமாறிய புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான்,

தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக கடந்த 24-ந் தேதி கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் 10 நாட்களில் 38-க்கும் மேற்பட்ட நாடுகளில் கால் பதித்து உலகை அதிர வைத்து வருகிறது.

ஒமைக்ரான் வைரஸ் தோன்றியுள்ள தகவல் வெளியானதும் இந்தியா உஷாரானது.

இந்த தொற்றை தடுப்பதற்காக அனைத்து விமான நிலையங்களிலும் வெளிநாட்டு பயணிகள் வந்திறங்குவது தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனினும், இந்தியாவையும் ஒமைக்ரான் விட்டு வைக்கவில்லை.

இந்தியாவில் இன்று 5 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.

இந்தியாவில் கர்நாடகாவில் இருவருக்கும், குஜாரத், டெல்லி மற்றும் மராட்டியத்தில் தலா ஒருவருக்கு என மொத்தம் 5 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், இன்று மராட்டியத்தில் கூடுதலாக 7 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இதனால், மராட்டியத்தில் மொத்தம் 8 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. தற்போது, ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரில் 9 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.