ஆரணிப் பெண்ணுக்கு ஒமைக்ரான் அறிகுறி - மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

CoronaVirus Omicron Arani
By Irumporai Dec 16, 2021 06:43 AM GMT
Report

கொரோனா தொற்று உறுதியான 22 பேரில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

ஒமைக்ரான தொற்று இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு முதன்முறையாக உறுதியானது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்: காங்கோவில் இருந்து வந்து ஆரணி சென்ற பெண்ணுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும், ஆரணி சென்ற பெண்ணுக்கு ஒமைக்ரானுக்கு முந்தைய அறிகுறி தெரிவதால் மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தகவல் தெரிவித்துள்ளார். ஒமை க்ரான் தொற்று உறுதியான நைஜீரியருடன் தொடர்பில் இருந்த 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

அதே சமயம் , இந்தியாவில் 11 மாநிலங்களில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் , சுகாதாரத்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து , கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.