தமிழகத்திலும் பரவியது புதிய வகை கொரோனா : அச்சத்தில் பொதுமக்கள்

COVID-19
By Irumporai May 21, 2022 06:06 AM GMT
Report

தமிழ்நாட்டில் ஒமைக்ரான் BA 4 வகை கொரோனா வரை கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் ஒருவருக்கு புதிய வகை வந்து சென்றுவிட்டது என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் :

தமிழகத்திலும் பரவியது புதிய வகை கொரோனா : அச்சத்தில் பொதுமக்கள் | Omicron Ba 4 Type Corona In Tamil Nadu

இந்த வகை தொற்று ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து தமிழகத்தில் பரவியுள்ளது. சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்தில் உள்ள அவரது தாயார் மற்றும் சகோதரியை பரிசோதனை செய்து இருக்கிறோம்.

தமிழகத்திலும் பரவியது புதிய வகை கொரோனா : அச்சத்தில் பொதுமக்கள் | Omicron Ba 4 Type Corona In Tamil Nadu

மற்ற மாநிலங்களில் ஒமைக்ரான் BA 4 வகை கொரோனா பரவி உள்ளதா என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்தும் எனக் கூறியுள்ளார், இந்த நிலையில் இந்த புதிய வகை கொரோனா பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.