டீ எஸ்டேட்டில் வேலை பார்க்கும் ஒலிம்பிக் வீராங்கனை..!
ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீராங்கனை ஒருவர் தனது குடும்பத்தை பாதுகாக்க டீ எஸ்டேட்டில் கூலி வேலை பார்க்கும் காட்சி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கோலாகலமாக நடைபெற்ற ஒலிம்பிக் தொடர் நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. இந்த தொடரில் வெற்றி பதக்கங்களுடன் திரும்பியவர்களை இந்தியா கொண்டாடி வரும் அதே வேளையில் ஒரு காட்சி காண்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அசாம் மாநிலம் திப்ருகரைச் சேர்ந்த பிங்கி கர்மாக்கர் என்ற வீராங்கனை தான் படித்த பள்ளியில் யுனிசெப்பின் விளையாட்டு மேம்பாட்டு திட்ட பொறுப்பாளராக பணியாற்றினார்.அவரது திறமையை அங்கீகரிக்கும் விதமாக 2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்திய தேசிய கொடியை ஏந்தும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
லண்டனில் இருந்து பிங்கி சொந்த ஊர் திரும்பிய போது, பிரம்மாண்ட வரவேற்பும் அளிக்கப்பட்டது. ஆனால் அதன்பின் அசாம் அரசும், விளையாட்டு அமைப்புகளும் எந்தவித வசதிகளையும் செய்து தரவில்லை.
இந்நிலையில் தற்போது குடும்பத்தை பாதுகாக்க டீ எஸ்டேட்டில் தினக்கூலியாக நாள் ஒன்றுக்கு ரூ.167 வருமானத்தில் வேலை செய்து வருவதாக பிங்கி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் கூலி தொழிலாளியின் மகள் கூலியாக இருப்பது மட்டுமே உண்மை என்று அவர் கூறியுள்ளார்.