ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ராவுக்கு உயரிய விருது - மத்திய அரசு அறிவிப்பு

Notice Central government Neeraj Chopra Olympic Man High Award
By Nandhini Jan 25, 2022 11:59 AM GMT
Report

ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ராவுக்கு உயரிய விருதான பரம் விசிஷ்ட் சேவா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ராவுக்கு குடியரசு தினத்தையொட்டி பரம் விசிஷ்ட் சேவா விருது அறிவித்து மத்திய அரசு கவுரவித்துள்ளது.

ராணுவத்தில் சுபேதாராக பணியாற்றி வரும் நீரஜ் சோப்ராவுக்கு குடியரசு தினத்தையொட்டி விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.

2008ம் ஆண்டில் பெய்ஜிங்கில் அபினவ் பிந்த்ராவுக்கு பிறகு, இந்தியாவின் 2வது தனிப்பட்ட தங்கம் இதுவே ஆகும்.

நீரஜ் சோப்ராவுக்கு கடந்த ஆண்டு நாட்டின் உயரிய விளையாட்டு விருதான மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ராவுக்கு உயரிய விருது - மத்திய அரசு அறிவிப்பு | Olympic Man Neeraj Chopra High Award Notice