"உங்களால் நாங்கள் பெருமை அடைகிறோம்" - ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்களுக்கு கோலி வாழ்த்து!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர் வீராங்கனைகளுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா சார்பில் 127 பேர் கலந்து கொண்டனர். ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம், மீராபாய் சானு மற்றும் ரவிக்குமார் தாஹியா வெள்ளிப்பதக்கம் பிவி சிந்து, லவ்லினா, பஜ்ரங் புனியா ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
இவர்களுக்கு இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்த தன்னுடைய ட்விட்டர் பதிவில் "ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்கள் மற்றும் கலந்து கொண்டவர்கள் என அனைவருக்கும் வாழ்த்துகள். வெற்றி மற்றும் தோல்வி விளையாட்டின் ஒரு பகுதி.
ஆனால், நாட்டிற்காக உங்களுடைய சிறந்த பங்களிப்பை எந்த அளவிற்கு கொடுத்தீர்கள் என்பதே பெருமை. உங்களால் நாங்கள் பெருமை அடைகிறோம். சிறந்த முறையில் முன்னோக்கிச் செல்ல வாழ்த்துகள். ஜெய் ஹிந்த்" எனப் பதிவிட்டுள்ளார்.
Congratulations to all our winners and participants at the Olympics. Winning and losing is a part of sport, but what matters is you gave your best for the nation. We are so proud of you and I wish you all the very best going forward. Jai Hind. ???#tokyo2020 #TeamIndia pic.twitter.com/xHkfQVutWg
— Virat Kohli (@imVkohli) August 8, 2021