15 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. சிக்கிய மளிகைக்கடை முதியவர்!

Coimbatore Sexual harassment POCSO Child Abuse
By Sumathi Sep 18, 2022 02:10 PM GMT
Report

மளிகைக்கடை முதியவர் ஒருவர் 15 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் புகார் 

கோவை, பொள்ளாட்சி ஆனைமலை பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன்(62). அந்தப் பகுதியில் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது.

15 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. சிக்கிய மளிகைக்கடை முதியவர்! | Oldman Arrested For Sexually Abusing 15 Students

ஆனைமலையில் உள்ள பள்ளி ஒன்றில் விழிப்புணர்வு வகுப்பு எடுக்கப்பட்டுள்ளது. அதில் மாணவ மாணவிகளுக்கு தொடுதல் குறித்த வகுப்பை எடுத்துள்ளனர். அப்போது மாணவிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும்போது, 13 வயது மாணவி ஒருவர் நடராஜன் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

முதியவர் கைது

தொடர்ந்து, 9 முதல் 13 வயது வரையிலான 14 மாணவிகள் அடுத்தடுத்து நடராஜன் மீது பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்தனர். இதையடுத்து நடராஜன்மீது பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு,

15 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. சிக்கிய மளிகைக்கடை முதியவர்! | Oldman Arrested For Sexually Abusing 15 Students

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். பாலியல் குற்றத்தை குறைப்பதற்காக மாவட்டக் காவல்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை இணைந்து `புராஜக்ட் பள்ளிக் கூடம்' என்ற திட்டத்தை செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.