2 உலக போர்; 22 பிரதமர்களை பார்த்த பாட்டி - ஒரே வீட்டில் வாழும் அதிசயம்!

London
By Sumathi Jul 17, 2023 10:02 AM GMT
Report

ஒரே வீட்டில் 105 வருடம் வாழ்ந்து வரும் மூதாட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

அதிசய பாட்டி

பிரிட்டனைச் சேர்ந்தவர் எல்சி ஆல்காக்(105). இந்த மூதாட்டி நாட்டிங்ஹாம்ஷையரில் உள்ள ஹுத்வைட்டில் உள்ள ஓர் வீட்டில் பிறந்தார். இந்த இடத்தில் வாடகைக்கு இருந்த அவரது குடும்பம் பின்னர் இதனை சொந்தமாக வாங்கியது. அப்போது அந்த வீட்டின் மதிப்பு வெறும் ரூ.26 ஆயிரம்தான்.

2 உலக போர்; 22 பிரதமர்களை பார்த்த பாட்டி - ஒரே வீட்டில் வாழும் அதிசயம்! | Old Woman Lived In Same House 105 Years In Britain

அதில் ஒரு ரூமை தனக்கென தேர்ந்தெடுத்து தனக்கு பிடித்த பொருட்களை சேகரித்து வைக்க தொடங்கியுள்ளார். திருமணம், குழந்தைகள் என அனைத்தும் இதே வீட்டில் இருந்தபடி நடந்திருக்கிறது. அவரது கணவர் இறந்துவிட்டார். தொடர்ந்து தாய், தந்தையும் இறந்துவிட்டனர்.

வைரல் வீடு

அதனால் அவரது மகன்கள் வீட்டை விற்றுவிட்டு வேறு இடத்திற்கு செல்ல வற்புறுத்தியுள்ளனர். ஆனால், அதனை விரும்பாத மூதாட்டி, அதே வீட்டில் இரண்டு உலகப் போர்கள், 22 பிரிட்டிஷ் பிரதமர்கள் என அனைத்தையும் பார்த்துள்ளார். தற்போது அங்கு மகன் ரேமனோடு(76) வசித்து வருகிறார்.

2 உலக போர்; 22 பிரதமர்களை பார்த்த பாட்டி - ஒரே வீட்டில் வாழும் அதிசயம்! | Old Woman Lived In Same House 105 Years In Britain

இதுகுறித்து மகன் தெரிவிக்கையில், "அம்மாவுக்கு வயதுதான் 105, ஆனால் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். வீடு முழுவதும் பம்பரமாக சுற்றுகிறார். அவருக்கு எந்த பொருள் எங்கே வைத்தோம் என்று சரியாக தெரியும். அந்த அளவுக்கு அபாரமான நினைவு திறன்" எனக் கூறியுள்ளார். 

2 உலக போர்; 22 பிரதமர்களை பார்த்த பாட்டி - ஒரே வீட்டில் வாழும் அதிசயம்! | Old Woman Lived In Same House 105 Years In Britain