6 சவரன் நகைக்காக 60 வயது மூதாட்டி கொடூர கொலை - உடலில் மஞ்சள் தூவி சென்ற அரக்கர்கள்!

chennai gold theft old lady murder
By Anupriyamkumaresan Jul 29, 2021 06:18 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

சென்னை காசிமேட்டில் 60 வயது மூதாட்டி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

6 சவரன் நகைக்காக 60 வயது மூதாட்டி கொடூர கொலை - உடலில் மஞ்சள் தூவி சென்ற அரக்கர்கள்! | Old Lady Murder In Chennai 6 Pown Gold Theft

சென்னை காசிமேடு பகுதியில் அந்தோணி மேரி - மைக்கல் நாயகம் தம்பதி வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று அதிகாலை கணவர் மைக்கல் நாயகம் மீன் பிடிக்க சென்ற நிலையில், அந்தோணி மேரி என்பவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இதனை தொடர்ந்து பணி முடிந்து வீட்டிற்கு வந்த கணவர், மனைவி மர்மமான முறையில் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

6 சவரன் நகைக்காக 60 வயது மூதாட்டி கொடூர கொலை - உடலில் மஞ்சள் தூவி சென்ற அரக்கர்கள்! | Old Lady Murder In Chennai 6 Pown Gold Theft

விசாரணையில் அந்தோணி மேரி அணிந்திருந்த தாலி செயின், மோதிரம் உள்ளிட்ட 6 சவரன் நகை கொள்ளையடித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

6 சவரன் நகைக்காக 60 வயது மூதாட்டி கொடூர கொலை - உடலில் மஞ்சள் தூவி சென்ற அரக்கர்கள்! | Old Lady Murder In Chennai 6 Pown Gold Theft

மேலும் மோப்ப நாய்கள் கண்டுபிடிக்காத வண்ணம் சடலம் முழுவதும் மஞ்சள் தூளை கொட்டிவிட்டு சென்றுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.