நேரடி முறையில் மட்டுமே தேர்வுகள் நடைபெறும்: தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்
only offline classes
Dr. Ambedkar Government Law College
By Anupriyamkumaresan
சட்ட பல்கலைக்கழக தேர்வுகள் நேரடி முறையில் மட்டுமே நடைபெறும் என்று அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா பெருந்தொற்று காரணமாக 2019 முதல் மூன்று பருவத்தேர்வுகளையும் அம்பேத்கர் சட்டப்பல்கலைகழகம் இணைய வாயிலாகவே நடத்தியது.
தற்போது அனைத்து பயிற்சி வகுப்புகளும் நேரடியாக நடத்தப்பட்டு வருவதால், பல்கலைக்கழக பருவத்தேர்வுகள் இனி நேரடியாக மட்டுமே நடத்தப்படும். இத்தேர்வுகள் டிசம்பர் 20 ஆம் தேதி தொடங்கி அனைத்து சட்டக்கல்லூரிகளிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.